கோல்கட்டா, மார்ச். 09: மேற்குவங்கத்தில் கடந்த 4ம் தேதியன்று ரஞ்சித் துலே என்ற ஆசிரியர் பங்குரா மாவட்டத்தில் இருந்து மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க போலீசார் கடத்தப்பட்ட 6 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகளால் நிபந்தனை வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளைக்கு பணிய மறுத்த போலீசார் அதிரடி வேட்டையை முடுக்கி விட்டனர். மாவோயிஸ்டு பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனையடுத்து நேற்றிரவு துலே விடுவிக்கப்பட்டார்.