கான்பரா, மார்ச். 05: ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். குழந்தையை கொலை செய்தல் என்பது மன்னிக்க முடியாத கொடூர செயல் என தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதிபட தெரிவித்தார். ஆஸ்திரேலிய பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து ஆஸி.,யில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என கூறிய சில நாட்களில் அங்கு இந்திய குழந்தை கொல்லப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.