வைரஸ் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற இலவச யோகா முகாம்
 

திருநெல்வேலி: ​ ​ வைரஸ் காய்ச்சலில் இருந்து விரைவில் நிவாரணம் பெற,​​ திருநெல்வேலியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடத்தப்படுகின்றன.

 இது குறித்து வாழும் கலை அமைப்பினர் வெளியிட்ட அறிக்கை:

​ ​ தென் மாவட்டங்களில் தொடர் மழைக்கு பின் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.​ இந்த காய்ச்சலால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கை,​​ கால்களில் வலி வீக்கம் ஏற்படுகிறது.​ இதை இயற்கை முறையில் யோகாவின் மூலம் குணப்படுத்த முடியும்.

யோகா,​​ பிராணயாமாக்கள்,​​ ஆசனங்கள்,​​ தியானங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து,​​ ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

மேலும்,​​ நரம்பு மண்டலம் வலுப் பெறுவதால்,​​ இந்த காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.​ ​ இந்த பயிற்சிகளை வாழும் கலை அமைப்பினர் இலவசமாக வெள்ளிக்கிழமை ​(ஜன.​ 8) முதல் ஞாயிற்றுககிழமை ​(ஜன.10) வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையும்,​​ மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கு அருகே உள்ள புஷ்பலதா மருத்துவமனை வளாகத்திலும்,​​ சந்திப்பு ம.தி.தா.​ இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடத்துகிறது.

​ மேலும்,​​ தகவலுக்கு 99944- 38100,​ 94435- 07618,​ 94436- 14999 ஆகிய செல்போன்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o பத்தியம் அவசியமா?
o எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் கோடையில்...
o கோலப்போட்டி, சமையல் ராணி மூலம் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
o பருவகால நோய்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த தீர்வு
o சிக்குன் குனியா நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் அளிப்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies