கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் பீன்ஸ் செடி நடவுப் பணியில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானலில் தற்போது அதிக பனிப்பொலிவு காரணமாக தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், விவசாயப் பயிர்களான உருளை, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகள் விவசாயம் செய்ய முடியவில்லை.
எனவே, குறைந்த நீரில் விவசாயம் செய்யக்கூடிய பீன்ஸ் பயிரை சாகுபடி செய்வதில், வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூர், பிரகாசபுரம், பூம்பாறை, மன்னவனூர், போலூர், கிளாவரை, குண்டுபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.