துவரை பயிரில் காய் துளைப்பான் நோய்
 

பெரம்பலூர்:​ ​ ​ துவரை பயிரை தாக்கும் காய் துளைப்பான் நோய் பரவாமல் தடுப்பது குறித்து ​ பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெ.​ ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் ​ குறிப்பு: ​ ​ பெரம்பலூர்,​​ அரியலூர் மாவட்டங்களில் ​ தற்போது பயிரிடப்பட்டுள்ள துவரை பயிர் பூ மற்றும் காய் முற்றும் பருவத்தில் உள்ளது.​ இதனிடையே,​​ இந்தப் பயிரில் காய் துளைப்பான்கள் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.​ எனவே,​​ ​ இதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 12 என்னும் அளவில் இனக்கவர்ச்சி பொறி வைக்க ​ வேண்டும்.​ பறவைகள் உட்கார டி வடிவிலான குச்சிகளை ஒரு ஹெக்டேருக்கு 50 நடவும்.

மேலும்,​​ 2 சத வேப்பண்ணெய் ​(100 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் வேப்பண்ணெய்)​ 5 சத வேப்பங்கொட்டை ​(5 கிலோ 100 லிட்டர் தண்ணீரில்)​ கரைசலை தெளிக்கவும்.​ டைக்குளோர்வாஸ் 500 மி.லிட்டர் அல்லது ​ எண்டோசல்பான் 1000 மி.லிட்டர் அல்லது தயோடிகார்ப் 500 கிராம் அல்லது இன்டாக்சோ கார்ப் 500 மி.லிட்டர்,​​ ஸ்பினேசாட் 4 சத மி.லிட்டர் இதில் ஏதாவது ஒன்றை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும்,​​ விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகவும் எனச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்
o பந்தல் செலவு பயம் போச்... தள தள தரை பீர்க்கு!
o வளம் தரும் வாத்து
o மாண்புமிகு மண் ஆற்றல்!
o பயிர் சாகுபடியில் கோழி எருவின் பயன்பாடுகள்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies