
* பேனா அல்லது எழுதுகோல்
எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
* அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.
* அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம்
மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.
* வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும்
பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில்
விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
*அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம்
நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.
* காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.
* தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும்
கலகத்தின் அறிகுறியே ஆகும்.
* சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும்.
தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.
* சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.
நம்பிக்கை மோசம் போவார்.
* ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ்
பெறுவர்.